யாழ்.காரைநகர் மற்றும் கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.காரைநகர் மற்றும் கிளிநொச்சி போத்தல் தண்ணீர் விநியோக நிறுவனத்தின் வாகன சாரதிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியிருக்கின்றார். 

யாழ்ப்பாணம் காரைநகரில் 40 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பிலிருந்து வருகை தந்த அவரை சுகாதாரத் துறையினர் சுயதனிமைப்படுத்தலில் வைத்துக் கண்காணித்தனர். 

அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் குடிதண்ணீர் போத்தல் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனத்தின் வாகனச் சாரதிக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் மேல் மாகாணத்துக்கு சென்று திரும்பிய நிலையில் கரைச்சியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். 

அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 71 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் மு

ன்னெடுக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. 

என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு