ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்!! -3 மணி நேரத்தில் வலுவிழக்கும்-

ஆசிரியர் - Editor II
ஆக்ரோஷமாக நகரும் நிவர் புயல்!! -3 மணி நேரத்தில் வலுவிழக்கும்-

இந்தியாவின் புதுச்சேரி-மரக்காணம் ஊடுாக கடக்கும் அதிதீவிர நிவர் புயல், நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக நகர்ந்து வருவதால் சூறைக்காற்றுடன் கனமழை நீடிக்கிறது.

இன்று வியழக்கிழமை காலை நிலவரப்படி நிவர் புயல், புதுச்சேரிக்கு வடமேற்கில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதனால் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை அங்கு பெய்து வருகிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் புயல் மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிவர் புயலின் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தன. சென்னையில் 50ற்க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்துள்ளன. வீடுகளின் கூரைகள் பெயர்ந்து காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாலும், பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு