தனக்கு கொரோனா தொற்றென அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் மரணம்!!

ஆசிரியர் - Editor II

கொரோனா பரிசோதனை செய்து கொண்ட மூதாட்டிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தொலைபேசியில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர் அதிர்ச்சியில் கீழே விழுந்து மரணமடைந்தார்.

திருப்பதி அடுத்த பீலேரு கலிகிரி பகுதியை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. இவர் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூதாட்டிக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மூதாட்டியின் தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இருப்பதாக தகவல் இருந்தது. 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மூதாட்டி திடீரென கீழே விழுந்தார். இதனைக்கண்ட அவரது கணவர் மற்றும் மகன் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு