கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது..! ஒயில் விற்பனை நிலையத்துடன் தொடர்புபட்டவர்கள்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கிளிநொச்சி 155ம் கட்டையில் ஒயில் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்யும் 72 வயதான முதியவர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த முதியவர் வேலை செய்த ஒயில் கடையை சூழவுள்ள கடைகள் மூடப்பட்டதுடன், 

அங்கிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் குறித்த ஒயில் கடைக்கு அருகில் உள்ள போத்தல் தண்ணீர் விற்பனை நிலையம் ஒன்றின் மீது சுகாதார பிரிவு கவனம் செலுத்தியிருந்தது. 

இந்நிலையில் ஒயில் விற்பனை நிலையத்துடன் தொடர்புடைய 27 போின் மாதிரிகள் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் அதே பகுதியில் உள்ள கடையில் பணியாற்றும் ஒருவர் மற்றும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான முதியவரின் மருமகன் உள்ளிட்ட 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு