வலுவடைந்து சூராவளியாக மாறும் நிவர் புயல்!! -5 கி.மீ வேக காற்றுடன் நகர்வதாக எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் வேகம் 4 கிலோமீற்றர் வேகத்தில் இருந்து 5 கிலோமீற்றர் ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோமீற்றர், புதுச்சேரிக்கு அருகே 410 கிலோமீற்றர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயல் 24 மணி நேரத்தில் தீவிர சூராவளியாக மாற்றமடைந்து நாளை மாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் நாளை மாலை அதிகபட்சமாக 120 கிலோமீற்றர் வேகத்தில் கரையை கடக்கும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு