புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்!!

ஆசிரியர் - Editor II
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி காலமானார்!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா, சிம்பு ஆகியோர் பணவுதவி செய்தனர்.

விரைவில் உடல் நலம் பெற்று வருவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு