இன்று 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆசிரியர் - Editor II

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1,655 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் புதிதாக 1,655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,69,995 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை 489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,12,014 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 36 ஆவது நாளாக சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 11 பேர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,605 ஆக அதிகரித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு