தயாரிப்பாளர் சங்க தேர்தல்!! -பொலிஸ் பாதுகாப்புடன்-

ஆசிரியர் - Editor II
தயாரிப்பாளர் சங்க தேர்தல்!! -பொலிஸ் பாதுகாப்புடன்-

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்றது. பல சர்ச்சைகளுக்கு பிறகு சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இடம்பெற்றது. 

அடையாறு எம்.ஜீ.ஆர். ஜானகி கல்லூரியில் நேற்று காலை 8மணிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ஆர் அணி மற்றும் தேனாண்டாள் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர தலைவர் பதவிக்கு பி.எல்.தேனப்பன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் களத்தில் உள்ளனர். 

இந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 1303 உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு