ராஜீவ் கொலை குற்றவாளிகளை ஆளுநரே விடுதலை செய்யலாம்!!

ஆசிரியர் - Editor II

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரே முடிவு செய்யலாமென சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இதற்கான முடிவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் எடுக்கவில்லை. 

இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்த சி.பி.ஐ. தரப்பு, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் என்றும் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு