நகை வாங்குவதுபோல் பாசாங்கு செய்து 4 லட்சம் பெறுமதியான நகை கொள்ளை..! தாய், மகள் மற்றும் மகளின் காதலன் கைது, நகை மீட்பு..

ஆசிரியர் - Editor I

வவுனியா நகரில் உள்ள நகை கடை ஒன்றில் நகை வாங்குவதுபோல் பாசாங்கு செய்து நகைகளை திருடிய தாய், மகள் மற்றும் மகளின் காதலன் உள்ளிட்ட 3 பேர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த 16ம் திகதி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், களவாடப்பட்ட நகைகள் அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள நகை அடவு நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில் 

அதனை மீட்டதுடன் நகையினை களவாடிய நபர்களையும் தலாவ பகுதியில் வைத்து கைது செய்தனர். 45வயதுடைய தாய் மற்றும் அவரின் 30 வயதுடைய மகள் மற்றும் மகளின் காதலான 18 வயதுடைய இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இவர்கள் நாடு முழுவதும் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதுடன் கொள்ளையடிக்கும் நகைகளை வேறுபகுதியில் அடவு வைப்பதினை கடந்த பல மாதங்களான செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட 4லட்சம் பெறுமதியான 3 காப்பினையும் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு