குடும்ப சண்டை கத்திக்குத்தில் முடிந்தது..! கத்திக்குத்துக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I

குடும்ப சண்டை காரணமாக கத்திக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் வவுனியா - சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கற்குளம் பகுதியில் குடும்பம் ஒன்றில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக பிரிந்துள்ளனர். 

இந்நிலையில் மனைவியுடன் பேசுவதற்காக மனைவியின் வீட்டுக்கு கணவன் சென்றுள்ளார். அங்கு இரு தரப்புக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. 

தர்க்கம் முற்றியதில் மனைவி, மாமியார், மாமியாரின் தாயார் ஆகியோர் மீது கணவன் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன், 

கத்திக்குத்துக்கு இலக்கானவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு