டிப்பர் மீது ஆட்டோ மோதி கோர விபத்து..! காயமடைந்த 6 வயதான சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி - பூநகரி பகுதியில் டிப்பர் - முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவத்தில் நந்தகுமார் நிதிலா என்னும் உதயநகர் கிளிநொச்சியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி கடந்த 8ம் திகதி முச்சக்கர வண்டியில் பெற்றோருடன் பயணித்த சமயம் வீதியில் கடப்பதற்கு தயாராக நின்ற டிப்பரின்

பின் பகுதியில் முச்சக்கர வண்டி மோதியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியின் கரியல் கம்பி வளைந்து முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த சிறுமியின் தலையில் தாக்கியது.

உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இவ்வாறு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார். உயிரிழந்தவர் தொடர்பான மரண விசாரனையை 

திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்  பிறேம்குமார் மேற்கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு