மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு அனுமதிகோரும் வழக்குகள் யாழ்.மேல் நீதிமன்றில் நாளை விசாரணைக்கு வரலாம்! ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உட்பட பலர் முன்னிலை..

ஆசிரியர் - Editor I

மாவீரர் நாள் நினைவேந்தலை தடைசெய்யகூடாது. என உத்தரவு வழங்ககோரி யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். என எதிர்பார்க்கப்படுகிறது. 

யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட இரு வழக்குகளை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்குமாறு வழக்காளர் சார்பு சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.

இந்த வழக்குகளில் தமிழ் மக்களிற்கான “மக்களிற்கான நீதி” சட்டத்தரணிகள் கூட்டின் ஏற்பாட்டாளர் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என மேல் நீதிமன்றில் தாக்கல். செய்த வழக்குகள் இரு வழக்குகளில் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஓருவர் தனியான வழக்காகவும் 

மேலும் எண்மர் இணைந்து ஒரு வழக்கு என மொத்தம் இரு வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு