இறந்தவர்களின் உடலை வடமாகாணத்திற்கு கொண்டுவருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் நடைமுறையில்..! மீறினால் எவர் மீதும் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்திற்கு வெளியில் உயிரிழந்த ஒருவரின் உடலை மாகாணத்திற்குள் கொண்டுவருவதற்கும், இறுதி கிரிகைகளை நடத்துவதற்கும் இறுதி சடங்கு நடைபெறும் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரியின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி குறித்த அனுமதியை வழங்குவதற்காக இறந்தவரின் விபரங்கள், இறப்புஏற்பட்ட வைத்தியசாலை அல்லது இடம் போன்ற விபரங்கள் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும். எனவும் கூறியுள்ளார். 

இறப்பு ஏற்பட்ட வைத்தியசாலையைத் தொடர்புகொண்டு கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே அனுமதிவழங்கப்படும். கொரோனா தொற்றினால் இறப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது அவ்வாறு இறப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டால் 

மிக இறுக்கமான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இறுதிச் சடங்கு செய்வதற்கு அனுமதிவழங்கப்படும். உடல் மின்சார தகன இயந்திரத்திலேயே எரியூட்டப்படவேண்டும், உடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஆகக் கூடியது 3 மணித்தியாலம் மட்டுமே 

வீட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படும். குடும்பத்தினர் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்குபற்றலாம் எனவும், அவர்கள் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார். அண்மையில் கொழும்பில் உயிரிழந்த ஒருவரின் உடலம் முன் அனுமதிபெறப்படாது 

கொழும்பிலிருந்து பாதி வழியில் வரும்போதே சுகாதார வைத்திய அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், இதனால் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களும், குடும்பத்தினரும் பாரியசிரமங்களுக்கும், அசௌகரியத்திற்கும் உள்ளாகியுள்ளனர் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வேறுமாகாணத்தில் இறப்பு ஏற்பட்டு வடக்கு மாகாணத்தில் இறுதிச்சடங்கு நடாத்தவிரும்பினால் முன்கூட்டியே சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதிபெற்ற பின் உடலத்தை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு 

பொதுமக்களை ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து எமதுசமூகத்தைப் பாதுகாப்பதுடன் ஏற்படும் நேரவிரயத்தையும் தவிர்த்துக் கொள்ளலாம் என ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு