யாழ்.சுழிபுரத்தில் குரூரம்..! இரு கோஷ்டிகளுக்கிடையில் மோதல், இருவர் கொலை, ஒருவர் காயம், நள்ளிரவு தாண்டியும் நீடித்த பயங்கரம்...

ஆசிரியர் - Editor I

யாழ்.சுழிபுரம் - குடாக்கனை பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடும் கும்பல் ஒன்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும்,

இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய சகோதரன் யாழ்.இணுவில் பகுதியிலிருந்து சுழிபுரம் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் 

நேற்று இரவு பெரும் களேபரம் அங்கு இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. சம்பவத்தில் ஒரு கோஷ்டி வாள்கள் மற்றும் ஆயுதங்கள் சகிதம் வீடுகளுக்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும்

உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது. சம்பவத்தில் ராசன் தேவராசா (வயது 31) மற்றும் சின்னவன் செல்வம் (வயது 56) என்ற இருவரே உயிரிழந்திருப்பதாக அப்பகுதியில் உள்ள சிலர் தெரிவித்திருக்கின்றனர். 

சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் அப்பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததாகவும் நள்ளிரவு தாண்டியும் பதற்றமான நிலை அங்கு நீடித்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு