மலசலகூடத்திற்கு வெட்டப்பட்ட குழியில் விழுந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I

வவுனியா - ஓமந்தை பன்றிக்கெய்த குளம் கிராமத்தில் மலசலகூடத்திற்கு வெட்டப்பட்ட குழியல் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தவறி மலசல கூடக்குழியில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சயீவினி (வயது 6) என்ற சிறுமியே 

மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு