நவம்பர் 7ம் திகதிக்கு பின்னர் வெளிமாவட்டங்களில் இருந்து வடமாகாணத்திற்குள் நுழைந்தவர்களுக்கு மாகாண சுகாதார திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I

வெளிமாவட்டங்களில் இருந்து நவம்பர் 7ம் திகதிக்கு பின்னர் வடமாகாணத்திற்குள் வந்தவர்கள் தற்போது தங்கியுள்ள பகுதிகளில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பதிவு செய்யவேண்டும். என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த பிரதேசங்களின் நோய் நிலமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானிப்பர்.

இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 

24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு