வடமாகாணத்தல் உள்ள அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 13ம் திகதிவரை காலக்கெடு..! மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தில் இயங்கும் அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்  இம் மாதம் 13ம் திகதிக்கு முன்னர் தங்கள் திணைக்களங்கள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களது விபரங்களை வழங்கவேண்டும். 

மேற்கண்டவாறு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 13ம் திகதிக்கு முன்பதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டவேண்டும். 

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிவிப்பை தாம் விடுப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். ஒவ்வொரு நிறுவனமும் தமது ஊழியர்களில் மூத்த நிலையிலுள்ள ஒருவரை 

நிறுவனத்திற்கான இணைப்பாளராக நியமனம் செய்து அவரது விவரங்களையும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு வழங்க வேண்டும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு