அனுராதபுரத்தை சேர்ந்த சோளன் வியாபாரி சோளன் விற்கு் வாகனத்திலேயே சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I

கனகராயன்குளம் பகுதியில் சோளன் வியாபாரம் செய்துவந்த அனுராதபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சோளன் விற்கும் வாகனத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கனகராஜன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே 

இன்று சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் மீட்கப்பட்ட நபரின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் வவுனியா மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு