யாழ்.வடமராட்சி - இராஜகிராமத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! இரு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன், பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 248 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

இரு பெண்களுக்கும், சிறுவன் ஒருவனுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேற்படி மூவரும் பேலியகொடை மீன் சந்தை பகுதிக்கு சென்று வந்ததன் காரணமாக தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஏற்கனவே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தென்பகுதியை சேர்ந்தவர்கள் தற்போது மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் செய்யப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு இன்னும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு