வடக்கில் தனியார் பேருந்து சேவை மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுகிறதா..?

ஆசிரியர் - Editor I
வடக்கில் தனியார் பேருந்து சேவை மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படுகிறதா..?

வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தனியார் பேருந்து சேவைகள் அந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே சேவையில் ஈடுபடும். என மாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுப்போக்குவரத்தினால் கொரோனாத் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தவைர் நா.நகுலராஜா எமக்குத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்து குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.இருந்தபோதிலும் வெளி மாகாணங்களிலிருந்து போக்குவரத்துக்களை நிறுத்துவதற்கு 

அந்த அந்த மாவட்டங்களின் தனியார் பேருந்து உரிமையாளர்களும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுப் போக்குவரத்தின் ஊடாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை அரச பேருந்துகளும் வெளி மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களை 

மட்டுப்படுத்தியுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் மாவட்டங்களுக்கு இடையில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையினை வழங்குவதற்கு அவர்களும் பேச்சுக்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு