யாழ்.கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் இன்று இரவு 18 கொரோனா நோயாளர்கள் அனுமதி..!

ஆசிரியர் - Editor I

யாழ்.கோப்பாய் கல்லியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் இன்று இரவு 18 கொரோனா நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளனர். 

நாடு முழுவதும் காணப்படும் நெருக்கடி நிலையினையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் 

கோப்பாய் கல்வியியற் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவமனையில் இன்று இரவு 18 நோயாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். இதனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். 

குறித்த நோயாளர்கள் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் என கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு