மாங்குளம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான யாழ்.பருத்துறையை சேர்ந்த குடும்பஸ்த்தர் பலி..!

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு - மாங்குளம் 1ம் கட்டை பகுதியில் காட்டுயானை தாக்கியதில் யாழ்.பருத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையில் தந்தை உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புனிதநகர் சந்தி கற்கோவளம் பருத்துறையை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தம் என்பவர் உயிரிழந்துள்ளார். 

கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்த இவரின் உடலம் மாங்குளம் பொலீசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு