கொழும்பில் தந்தையை பார்க்க சென்று திரும்பிய 9 வயது மகளுக்கே யாழ்.உடுவில் - சங்குவேலியில் கொரோனா தொற்று..! தொற்றுக்குள்ளான இருவருடன் தொடர்பற்றவர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 வயது சிறுமி சங்குவேலியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றும் தந்தையிடம் சென்று கடந்த 25ம் திகதி திரும்பிய தாய் மற்றும் மகள் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். 

அவர்கள் இருவரிடமும் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன.அவர்களில் மகளுக்கு கோவிட் -19 நோய் உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் உடுவில் அம்பலவாணர் வீதி உதயசூரியன் சந்தியில் தாய் மற்றும் 2 வயது மகளுக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு