கிளிநொச்சி கொரோனா நோயாளியுடன் பயணித்தவர்கள் உங்களை அடையாளப்படுத்துங்கள்..! மாகாண சுகாதார பணிப்பாளர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி கண்டாவளை - தர்மபுரம் 3ம் யூனிட் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்தில் பயணித்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பில் இருந்து ஒக்டோபர் 25ஆம் திகதி கண்டாவளை ,கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த ஒருவருக்கு கோரோனா தொற்று நேற்று நவம்பர் 2ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் ஒக்டோபர் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான NB 9756 இலக்க பேருந்தில் பயணம் செய்து அன்று மாலை 4 மணிக்கு வவுனியா வந்தடைந்துள்ளார்.

பின்னர் அதே தினம் மாலை 4 மணிக்கு வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட NB 9899 இலக்க தனியார் பேருந்தில் பயணித்து கிளிநொச்சி பேருந்து நிலையத்தை மாலை 6 மணிக்கு வந்தடைந்துள்ளார்.இதன் பின்னர் கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து 

முல்லைத்தீவு நோக்கி அதேதினம் மாலை 6.15 மணிக்கு புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான JI 0758 இலக்க பேருந்தில் பயணம் செய்து கண்டாவளையை அடைந்துள்ளார்.மேற்படி பேருந்துகளில் அவருடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 

24மணிநேர அவசர அழைப்பிற்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தரவும். பயணம் செய்தவர்களின் விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கோரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் 

உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க 

பயணம் செய்தவர்கள் அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு