கிளிநொச்சியில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் பயண விபரம் வெளியானது..! மக்கள் அவதானம்..

ஆசிரியர் - Editor I

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 1வது நபரின் பயண விபரம் வெளியாகியிருக்கின்றது. இதனடிப்படையில் சுகாதார அதிகாரிகளினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதகதியில் எடுக்கப்படவிருக்கின்றது. 

கொழும்பில் உள்ள மயூரா உணவகத்தில் பணியாற்றிய குறித்த நபர் கொழும்பிலிருந்து கடந்த 25ம் திகதி கொழும்பு - வவுனியா பேருந்தில் பயணித்து காலை 10 மணிக்கு வவுனியா வந்தடைந்துள்ளார். 

பின்னர் அங்கிருந்து மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் - வவுனியா பேருந்தில் கிளிநொச்சி - பரந்தன் வரை பயணித்த குறித்த நபர் பரந்தன் சந்தியில் பழங்களை வாங்கிக் கொண்டு,

மாலை 6.15 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் தர்மபுரம் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் பயணித்த இடங்கள், நேரம், என்பவற்றின் அடிப்படையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு