கடுமையான நடவடிக்கையை எடுங்கள், அதி முக்கிய தேவையில்லாமல் எவருக்கும் சலுகை வழங்கவேண்டாம்..! ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், மிக அத்தியாவசிய தேவைக்கு மட்டும் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொருட்கள் விநியோகத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகளில் திருமண நிகழ்வு மற்றும் மத வழிபாடு 

உட்பட மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு