ஹோட்டலில் இருந்து திடீரொன அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்த சுசித்ரா!!

ஆசிரியர் - Editor III
ஹோட்டலில் இருந்து திடீரொன அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்த சுசித்ரா!!

பிரபல பின்னணிப் பாடகியும் நடிகையுமான சுசித்ரா தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து திடீரென அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடியதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளது.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனுக்கு அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக, கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும், அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு