கொரோனாவுக்கு மத்தியில் பீகாரில் தேர்தல்!! -முதல் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்-

ஆசிரியர் - Editor III
கொரோனாவுக்கு மத்தியில் பீகாரில் தேர்தல்!! -முதல் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்-

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் இன்று புதன்கிழமை காலை ஆரம்பமாகியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு