யாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I

யாழ்.குருநகரில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

குருநகர் பகுதியில் உள்ள கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகரை சேர்ந்த ஒருவருக்கும், பருத்துறையை சேர்ந்த ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறித்த இருவரும் பேலியகொட மீன் சந்தைக்கு மீன் விற்பனைக்காக சென்றுவந்துள்ளதுடன், கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் பீ.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு