மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!!

ஆசிரியர் - Editor III
மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி!!

நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என ஆளும் பாஜக அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய இணைமந்திரி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் பலசோரி தொகுதிக்கு வரும் 3 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஆளும் மத்திய பாஜக அரசில் மத்திய இணைமந்திரியாக உள்ள பிரதாப் சாரங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதாப் சாரங்கியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சாரங்கி, ‘ இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்ற தகவலை பிரதமர் மோடி அறிவிப்பார். இதற்காக ஒரு நபருக்கு கொரோனா தடுப்பூசி போட சராசரியாக 500 ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு