யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..! பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். 

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் 

கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரிடமும் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

பேலியகொட மீன் சந்தை கொரோனா தொற்று பரவல் கொத்தணியுடன் தொடர்புடைய தென்னிலங்கையைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொற்றுக்குள்ளான இருவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டபோது

தனிமைப்படுத்தல் விடுதியிலேயே அனுமதிக்கப்பட்டமையாலும் மக்கள் பீதியடையதேவையில்லை. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு