யாழ்.சாவகச்சோி, வல்வெட்டித்துறை, கிளிநொச்சி பகுதிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! நெடுங்கேணி தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணம் - சாவகச்சோி, வல்வெட்டித்துறை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 3 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. 

குறித்த 3 பேரும் நெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதேவேளை தொற்குள்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு