வவுனியா- நெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கு மொத்த தொற்றாறர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.நெடுங்கேணியில் கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் ஊடாக வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவந்த

 ஏழு பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரோனா பரிசோதனை செய்தபோது 

மூவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் மேலும் இருவர் உட்பட ஐவருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு