யாழ்.பருத்துறை கடலில் கடற்படை அதிரடி..! பருத்துறையிலிருந்து தமிழகம் சென்று கஞ்சா கடத்திவந்த 3 பேர் கைது, கடலில் வீசப்பட்ட 80 கிலோ கஞ்சா மீட்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த 3 பேர் யாழ்.பருத்துறை கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினரின் ரோந்து படகை கண்டதும் தமிழகத்திலிருந்து கடத்திவந்த கஞ்சா பொதிகளை கடலில் வீசிய நிலையில் கடற்படையினர் இவர்களை கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடலில் வீசப்பட்ட 80 கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு