இந்தியாவை இடைவிடாது துரத்தும் கொரோனா!! -24 மணி நேரத்தில் மட்டும் 55,838 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor III
இந்தியாவை இடைவிடாது துரத்தும் கொரோனா!! -24 மணி நேரத்தில் மட்டும் 55,838 பேருக்கு தொற்று-

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 55 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு அறிவித்துள்ளனர். 

சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று ஒரே நாளில் மேலும் 55 ஆயிரத்து 838 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,06,946 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 79,415 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 68,74,518 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதித்த 7,15,812 பேருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 702 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1,16,616 பேர் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு