யாழ்.மாவட்டத்தில் அபாய நிலை இல்லை..! சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். யாழ்.மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அபாய நிலை இல்லை..! சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். யாழ்.மாவட்ட செயலர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டிருந்த நிலையில் கட்டைக்காடு பகுதியில் குறித்த பணியாளர் மற்றும் அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

இந்நிலையில் வடமராட்சி கிழக்கில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்ச நிலை தணிந்திருப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தொிவித்திருக்கின்றார். மேலும் யாழ்.மாவட்டத்தில் தற்போது தெற்று அபாயம் கட்டுக்குள் உள்ளபோதும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எனவும் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. 

அதனடிப்படையில் இன்று 323 குடும்பங்களைச் சேர்ந்த 595 நபர்கள் மட்டுமே சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று கோரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பருத்தித்துறை சாலை பேருந்து நடத்துனர் 

மேலதிக சிகிச்சைக்காக இரணவில கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனை நிறைவுறும்வரை கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

மருதங்கேணியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டவர்களிற்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக வீதி திருத்த பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. 

எனவே மருதங்கேணி பகுதியில் காணப்பட்ட அச்ச நிலமை தற்போது நீங்கியுள்ளது.புங்குடுதீவு பகுதியானது தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிலரது பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததும் தற்காலிக முடக்கம் விரைவில் நீக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாத்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. அங்கு தனிமைப்படுத்தலுக்குட்பட்டோருக்கு 

தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார்கள். எனவே குறித்த விடயம் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு