கொவிட் -19 தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சையளிக்க வடமாகாணத்தில் மருத்துவமனை..! இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறப்பு வைத்தியசாலை அமைக்க இராணுவம் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தளபதியும் கொரோனா எதிர்ப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

100 படுக்கைகளைக் கொண்டதாக இந்த சிறப்பு வைத்தியசாலையை தயார்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கோவிட் 19 நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700 பேரை அண்மித்துள்ள நிலையில் அரச வைத்தியசாலைகளுக்கு மேலாக இந்த சிறப்பு வைத்தியசாலையை வடமாகாணத்தில் அமைக்க இராணுவம் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு