மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டிட வேலைக்கு வந்திருந்த புத்தளம் - வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

மன்னார் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புத்தளம் - வென்னப்புவ பகுதியை சேர்ந்த 5 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

புத்தளம் - வென்னப்புவ பகுதியை சேர்ந்த 36 பேர் மன்னார் படித்தோட்டம் பகுதியில் மன்னார் ஆயர் இல்லத்தில் கட்டிட நிர்மாண பணிகளுக்காக தங்கியிருந்த நிலையில், 

கடந்த 8ம் திகதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 35 பேர் தங்கியிருந்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 

அவர்களில் 27 பேருக்கு முதற்கட்டமாக நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போதே 5 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

மேற்கண்டவாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டி.வினோதன் தொிவித்தள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு