அதுதான் என் கனவு மனம் திறக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!!

ஆசிரியர் - Editor III
அதுதான் என் கனவு மனம் திறக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!!

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியகளில் ஒருவராக வலம்வரும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர். 

இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் நடைபெற்றது. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது. 

என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு