கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்..! புலம்பெயர் நாடொன்றிலிருந்து வழிநடத்தல், ஆவா குழுவை சேர்ந்த 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்..! புலம்பெயர் நாடொன்றிலிருந்து வழிநடத்தல், ஆவா குழுவை சேர்ந்த 4 பேர் கைது..

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆவா குழுவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில்வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது

குறித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பஸ்த்தர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு 

வருகை தந்திருந்த்துடன் அவர்களுக்கான தாக்குதல் திட்டம் புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நேற்றைய தினம் குறித்த நபர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், 

குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைதானவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், மெலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு