யாழ்.பல்கலைகழகத்தில் ஸ்திரமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது..! துணைவேந்தர் கருத்து..

ஆசிரியர் - Editor I

கொரோனா அபாயத்தை எதிர்கொள்வதற்கு தேவையான ஸ்திரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை யாழ்.பல்கலைகழகம் எடுத்துள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா கூறியுள்ளார். 

கொரோனா அபாயம் தொடர்பாகவும், அதனை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பாகவும் மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று மாலை துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்தக் கலந்துரையாடலில், நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பதிவாளர், அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை நெறிப்படுத்தும் வகையிலும், பீடாதிபதிகளை ஒருங்கிணைக்கும் வகையிலும், 

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் செயற்படவுள்ளார் என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு