பூநகரி - பரந்தன் வீதி 3 நாட்களுக்கு முற்றாக மூடப்படுகிறது..! துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்தவொரு வாகனத்திற்கும் அனுமதியில்லை..

ஆசிரியர் - Editor I

பூநகரி - பரந்தன் பிரதேசங்களை இணைக்கும் வீதி எதிர்வரும் 3ம் திகதி தொடக்கம் 3 நாட்களுக்கு முற்றாக மூடப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பணிப்பாளர் சி.எம்.மொறாய்ஸ் தொிவித்துள்ளார். 

பூநகரி  பரந்தன் வீதியில் பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றருக்குஅண்மையாக உள்ள 11/5 இலக்க இரும்பு பாலம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய பழுதை திருத்தம் செய்யவுள்ளமை காரணமாக எதிர்வரும் 03,04,05-10-2020 ஆதாவது வரும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று தினங்களும் 

அப் பாதையின் ஊடான அனைத்து போக்குவரத்துகளும் முற்றாகதடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மாற்று பாதைகளைபயன்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார். 03ம் திகதி சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும், 

இக்காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்த எந்த வாகனங்களும்குறித்த வீதியினை பயன்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு