நீதி அமைச்சில் வேலைவாய்ப்பு..! தொலைபேசி ஊடாக மோசடி, 45 பேர் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டனர், மக்களே அவதானம்..

ஆசிரியர் - Editor I
நீதி அமைச்சில் வேலைவாய்ப்பு..! தொலைபேசி ஊடாக மோசடி, 45 பேர் பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டனர், மக்களே அவதானம்..

நீதி அமைச்சில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி போலி அழைப்பு கடிதங்களை வழங்கிய நபரை நம்பி நீதி அமைச்சுக்கு நேற்றும், இன்றும் சென்ற சுமார் 45 பேர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். 

நீதி அமைச்சினால் பதவிநிலைகளுக்கு நியமனங்கள் வழங்கும் எதுவித ஏற்பாடும் அமைச்சில் இல்லையென இளையோர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

17 ஆயிரத்து 500 ரூபாய் தொடக்கம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை பணத்தைப் பெற்ற ‘சமந்த’ என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர், 

தொலைபேசியூடாக இளையோரை ஏமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு