ஒன்றிணைந்த தமிழ்தேசிய கட்சிகளின் உணவு ஒறுப்பு போராட்டத்திற்கு தடைகோரி பருத்துறை நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம்..!

ஆசிரியர் - Editor I
ஒன்றிணைந்த தமிழ்தேசிய கட்சிகளின் உணவு ஒறுப்பு போராட்டத்திற்கு தடைகோரி பருத்துறை நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம்..!

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை கண்டித்து நாளை தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் நடத்தப்படவுள்ள மாபெரும் உணவு ஒறுப்பு போராட்டத்திற்கு தடைகோரி 

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா தலைமையில் 

அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று கூடி 

நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த தடை உத்தரவு கோரும் விண்ணப்பம் இன்று பிற்பகல் 

பருத்தித்துறை நீதிமன்றில் அழைக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு முழுவதும் கடையடைப்புக்கும் 

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு