பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்..!

ஆசிரியர் - Editor I
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்..!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. என அவர் தற்போது சிகிச்சை பெற்றுவரும் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை இன்று மாலை அறிவித்துள்ளது. 

வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின்பேரில் தொடர்ந்தும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், 

எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஓகஸ்ட் மாதம் 5-ம் திகதி 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஓகஸ்ட் 14-ம் திகதி மீண்டும் மோசமடைந்தது 

.பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்.பி.பிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து சுகமடைந்திருந்தார்.

அத்துடன் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு