வடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..! வடக்கு அரசியல்வாதிகளுக்கு தொியுமா?

ஆசிரியர் - Editor I
வடக்கில் 78 இடங்களை ஒரு வர்த்தமானி பிரசுரம் கூட இல்லாமல் ஆக்கிரமித்திருக்கும் தொல்பொருள் திணைக்களம்..! வடக்கு அரசியல்வாதிகளுக்கு தொியுமா?

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 78 இடங்களை வர்த்தமானி அறிவித்தல் இல்லாமல் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

3 மாவட்டங்களிலும் சுமார் 121 இடங்களை தொல்லியல் திணைக்களம் தமக்கு உரித்தானதாக அடையாளப்படுத்தியுள்ளது. ஆனாலும் 43 இடங்களுக்கு வர்த்தமானி பிரசுரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

தொல்பொருள் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும் 

தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில் 

வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் , மன்னார் மாவட்டத்தில் 25 இடங்களும் உள்ள அதே நேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 இடங்கள் உள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது. 

இதேநேரம் வவுனியா மாவட்டத்தில் உள்ள 43 இடங்களில் 8 இடங்களிற்கும் , மன்னார் மாவட்டத்தின் 25 இடங்களில் 14 இடங்களிற்கு மட்டுமே வர்த்தமானி பிரசுரம் உள்ள அதே நேரம் 

முல்லைத்தீவு மாவட்டத்தின் 53 இடங்களில் 23 இடங்களிற்குமாக மொத்தம் 43 இடங்களிற்கு மட்டும் வர்த்தமானி பிரசுரம் உள்ளதாக திணைக்களம் உறுதி செய்துள்ளது. 

இதன் அடிப்படையில் 3 மாவட்டத்திலும் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ளதாக தெரிவிக்கப்படும் 121 இடங்களில் 78 இடங்களிற்கு அரச வர்த்தமானி பிரசுரம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு