புதிதாக 86,961 பேருக்கு கொரோனா!! -இடைவிடாது அதிகரிக்கும் தொற்று-

ஆசிரியர் - Editor III
புதிதாக 86,961 பேருக்கு கொரோனா!! -இடைவிடாது அதிகரிக்கும் தொற்று-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 86,961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டி,  54 இலட்சத்து 87 ஆயிரத்து 581 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 இலட்சத்து 3 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 43 இலட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆயிரத்து 882 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு