24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா!! -இந்தியாவில் நிலை மோசம்-

ஆசிரியர் - Editor III
24 மணி நேரத்தில் 93,337 பேருக்கு கொரோனா!! -இந்தியாவில் நிலை மோசம்-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 93,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 93,337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மேலும் 1,247 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 53 இலட்சத்தை தாண்டி,  53 இலட்சத்து 8 ஆயிரத்து 15 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 10 லட்சத்து 13 ஆயிரத்து 964 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 42 இலட்சத்து 08 ஆயிரத்து 432 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்து 619 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனுடன் 6 கோடியே 24 இலட்சத்து 54 ஆயிரத்து 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு