ஒரு நிமிடத்தில் 2 கைகளால் 45 வார்த்தைகளை எழுதும் மாணவி!! -உலக சாதனையை பதிவு செய்தார்-

ஆசிரியர் - Editor III
ஒரு நிமிடத்தில் 2 கைகளால் 45 வார்த்தைகளை எழுதும் மாணவி!! -உலக சாதனையை பதிவு செய்தார்-

இந்தியாவில் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி ஒருவர் உலக சாதனை படைத்து உள்ளார். 

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த கோபட்கர், சுமா பட்கர் ஆகிய தம்பதியினரின் மகள் ஆதிஸ்ரூபா (வயது 17).

தந்தை நடத்தும் ஒரு கல்வி பயிற்சி மையத்தில் ஆதிஸ்ரூபாவும் படித்து வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் படித்து வருபவர்களுக்கு தனித்திறனை வளர்த்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல ஆதிஸ்ரூபாவுக்கும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அவரும் அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வந்தார். தற்போது 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். குறிப்பாக வலது கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதி வருகிறார்.

குறித்த மாணவியின் திறமையை அறிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது. 

இதில் கலந்து கொண்ட ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார். 

ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆதிஸ்ரூபா தகர்த்து உலக சாதனை படைத்து உள்ளார் என்று கல்வி நிறுவனம் அறிவித்து உள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு